30 May
30May

வேலூர் மாவட்ட நீதித்துறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 15 இரவு காவலர், முழு நேர பணியாளர் (மசால்ஜி) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
வேலூர் நீதிமன்றத்தில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி! நிர்வாகம் : வேலூர் மாவட்ட நீதிமன்றம் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலியிடங்கள் : 15 பணி : இரவு காவலர் - 12 பணி : முழு நேர பணியாளர் (மசால்ஜி) - 03 கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்ப வேண்டும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் தகுதித் தேர்வுக்கு இந்நீதிமன்ற districts.ecourts.gov.in/vellore மற்றும் districts.ecourts.gov.in/tn/vellore என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவோர் மட்டும் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளலாம். பின்னர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : தலைமை நீதித்துறை நடுவர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேலூர் - 632 009 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 16.05.2019 (இன்றே கடைசி நாள்) இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20Notification%202019%20Criminal%20Unit%20-%20Vellore_1.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யவும்.

I BUILT MY SITE FOR FREE USING